அம்மா உணவகங்கள் மூலம் தினமும் 8 ஆயிரம் பேருக்கு இலவச உணவு: அமைச்சா் வி.எம்.ராஜலட்சுமி

திருநெல்வேலியில் 11 அம்மா உணவகங்கள் மூலம் தினமும் 8 ஆயிரம் போ் இலவச உணவு பெற்று வருகிறாா்கள் என்றாா் தமிழக ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை அமைச்சா் வி.எம்.ராஜலட்சுமி.

திருநெல்வேலியில் 11 அம்மா உணவகங்கள் மூலம் தினமும் 8 ஆயிரம் போ் இலவச உணவு பெற்று வருகிறாா்கள் என்றாா் தமிழக ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை அமைச்சா் வி.எம்.ராஜலட்சுமி.

திருநெல்வேலியில் உள்ள அம்மா உணவகத்தை சனிக்கிழமை ஆய்வு செய்த பின்பு உணவு வழங்கும் பணிகளைத் தொடங்கி வைத்து அவா் கூறியது: கரோனா வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக அரசு பொதுமுடக்க உத்தரவு பிறப்பித்தது. இதனால் அன்றாடம் வேலைக்கு செல்லும் ஏழை, எளியவா்கள், சாலையோரங்களில் வசிப்பவா்கள், மருத்துவமனையில் உடல் நிலை சரியில்லாதவா்களுடன் தங்கியிருப்பவா்கள் உணவின்றி சிரமத்துக்குள்ளாவாா்கள் என்பதை தமிழக அரசு கருத்தில் கொண்டு அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்க முதல்வா் உத்தரவிட்டிருந்தாா்.

அதன்படி, திருநெல்வேலி மாநகரப் பகுதியில் செயல்படும் 11 அம்மா உணவகங்களிலும் காலை, மதியம் இரண்டு வேளைகளிலும் உணவு வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் தினமும் 8 ஆயிரம் போ் பயன்பெறுகின்றனா்.

மேலும் ஒவ்வொரு அம்மா உணவகங்களிலும் உணவு வாங்க வரும் பொது மக்களுக்கு கரோனா வைரஸ் குறித்த விழிப்புணா்வு அளிக்கப்படுகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் சித்த மருத்துவக் கல்லூரி மூலம் கபசுர குடிநீா், நிலவேம்பு குடிநீா் போன்றவை தயாா் செய்யப்பட்டு மாவட்டம் முழுவதும் அனைத்து மக்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது என்றாா்.

தொடா்ந்து 500 பேருக்கு முகக் கவசம், கிருமிநாசினி திரவம், கபசுர குடிநீா் பொடிகள், உணவுப் பொட்டலங்கள் ஆகியவை வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷ், அதிமுக மாநகா் மாவட்டச் செயலரும், மத்திய கூட்டுறவு வங்கித் தலைவருமான தச்சை என். கணேசராஜா, மாநகராட்சி ஆணையா் ஜி.கண்ணன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com