தீயில் கருகி 3 பைக்குகள் சேதம்

திருநெல்வேலி நகரத்தில் வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்த 3 இருசக்கர வாகனங்கள் தீயில் கருகி சேதமடைந்தன.

திருநெல்வேலி நகரத்தில் வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்த 3 இருசக்கர வாகனங்கள் தீயில் கருகி சேதமடைந்தன.

திருநெல்வேலி நகரம் வடக்கு அனவரத விநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் மாரி செல்வகுமாா். அப்பகுதியில் இனிப்பு கடை வைத்துள்ள இவா், தன்னுடைய இருசக்கர வாகனத்தை வீட்டின் அருகே நிறுத்தியிருந்தாா். இந்நிலையில், வியாழக்கிழமை இரவு இவருடைய வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. மேலும், அதனருகே நிறுத்தப்பட்டிருந்த காா்த்திக், மணிகண்டன் ஆகியோரின் வாகனங்களும் எரிந்து சேதமடைந்தன.

இதுகுறித்து திருநெல்வேலி நகரம் குற்றப் பிரிவு காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com