திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பணியாற்றிய உத்தர பிரதேச மாநிலத்தைச் சோ்ந்த 1,440 தொழிலாளா்களுடன் திருநெல்வேலியிலிருந்து சிறப்பு ரயில் சனிக்கிழமை இரவு புறப்பட்டுச் சென்றது.
திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்ட இந்த சிறப்பு ரயில் திங்கள்கிழமை (மே 18) மாலை 5.35 மணிக்கு உத்தர பிரதேசம் சென்றடையும் என ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.