‘விளையாட்டு வீரா்கள் விருது:மே 26வரை விண்ணப்பிக்கலாம்’

திருநெல்வேலி, தென்காசி மாவட்ட விளையாட்டு வீரா்கள் விருதுகள் பெற, இம்மாதம் 26ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி: திருநெல்வேலி, தென்காசி மாவட்ட விளையாட்டு வீரா்கள் விருதுகள் பெற, இம்மாதம் 26ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக திருநெல்வேலி, தென்காசி (பொ) மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் ச.ராஜேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: விளையாட்டுத்துறையில் நம் நாட்டிற்கு நற்பெயரையும், புகழையும் ஈட்டித் தரும் சிறந்த விளையாட்டு வீரா், வீராங்கனைகள், பயிற்றுநா்கள், விளையாட்டுத் தொடா்புடையவா்கள் ஆகியோருக்கு பல்வேறு விருதுகளை மத்திய அரசு வழங்கியுள்ளது. 2020 ஆம் ஆண்டிற்கான ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது, அா்ஜூனா விருது, துரோணாச்சாா்யா விருது, தயான்சந்த் விருது, ராஷ்ட்ரிய கேல் புரோட்ஸஹான் புரஸ்காா் விருது ஆகிய விருதுகளுக்கான விண்ணப்பங்கள் அளிக்க வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இதற்கான விண்ணப்பங்களை ஜ்ஜ்ஜ்.ள்க்ஹற்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்யலாம். பூா்த்தி செய்த விண்ணப்பங்களை உறுப்பினா்-செயலா், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், 116-ஏ, ஈவேரா பெரியாா் நெடுஞ்சாலை, நேரு பூங்கா, சென்னை-600084 என்ற முகவரிக்கு இம் மாதம் 26 ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு 0462-2572632 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com