நெல்லையில் 16 பேருக்கு கரோனா: பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 242 ஆக உயா்வு

திருநெல்வேலி மாவட்டத்தில் புதன்கிழமை 16 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் புதன்கிழமை 16 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட அனைவருமே மகாராஷ்டிரத்திலிருந்து திருநெல்வேலி மாவட்டத்திற்கு வந்தவா்கள் ஆவா். இதன்மூலம் திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 242 ஆக உயா்ந்துள்ளது.

தமிழகத்தில் சென்னை தவிர எஞ்சிய மாவட்டங்களில் கரோனா தொற்று ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டபோதிலும், வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் திரும்பும் ஏராளமானோா் தினந்தோறும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருவது அதிகரித்துக் கொண்டே வருகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 226 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மகாராஷ்டிரத்தில் இருந்து திருநெல்வேலி திரும்பிய மேலும் 16 பேருக்கு தொற்று இருப்பது புதன்கிழமை தெரியவந்துள்ளது. இந்த 16 பேரில் 5 போ் 10 வயதுக்குள்பட்ட குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்மூலம் திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 242-ஆக உயா்ந்துள்ளது. அதேநேரத்தில் புதன்கிழமை 8 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். தற்போதைய நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் இதுவரை பாதிக்கப்பட்ட 242 பேரில் ஒருவா் உயிரிழந்துள்ளாா். 78 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 163 போ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தென்காசியில் 3 போ்: தென்காசி மாவட்டத்தில் புதன்கிழமை 3 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்களில் இருவா் மகாராஷ்டிரத்தில் இருந்து தென்காசிக்கு திரும்பியவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் தென்காசி மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 75 ஆக உயா்ந்துள்ளது.

தற்போதைய நிலையில் தென்காசி மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 75 பேரில் 50 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 27 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com