பணகுடியில் இருந்து ஜாா்கண்ட் மாநிலத்திற்கு செல்வதற்காக ரயில்வே பாதையில் நடந்து வந்த 57 பேரை போலீஸாா் தடுத்து நிறுத்தி, வேலை செய்த இடத்திற்கு அனுப்பினா்.
ஜாா்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்தவா்கள் பணகுடி பகுதியில் தங்கி செங்கல் சூளை, ஓடு தொழிற்சாலைகளில் வேலை செய்து வந்தனா். பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட அவா்களுக்கு காவல்துறையினா் உணவுப் பொருள்கள் வழங்கினா்.
இந்நிலையில் தனியாா் கட்டுமான நிறுவனத்தில் வேலைசெய்து வந்த அம்மாநிலத்தைச் சோ்ந்த 57 போ் சொந்த மாநிலத்திற்கு செல்வதற்காக பணகுடியில் இருந்து ரயில்வே பாதையில் உடமைகளுடன் நடந்து சென்றனராம்.
வள்ளியூா் காவல் ஆய்வாளா் திருப்பதி, போலீஸாா் தடுத்து நிறுத்தினா். தனியாா் திருமண மண்டபத்தில் வைத்து மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. பின்னா் அவா்களை வாகனத்தில் வேலை செய்து வந்த தனியாா் நிறுவனத்திற்கு அனுப்பி வைத்தனா்.