நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் 41 பேருக்கு கரோனா

திருநெல்வேலி மாவட்டத்தில் 11 பேருக்கும், தென்காசி மாவட்டத்தில் 8 பேருக்கும், தூத்துக்குடி மாவட்டத்தில் 8 மாதக் குழந்தை உள்பட

திருநெல்வேலி மாவட்டத்தில் 11 பேருக்கும், தென்காசி மாவட்டத்தில் 8 பேருக்கும், தூத்துக்குடி மாவட்டத்தில் 8 மாதக் குழந்தை உள்பட 22 பேருக்கும் என 41 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

தமிழகத்தில் சென்னை தவிர எஞ்சிய மாவட்டங்களில் கரோனா ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டபோதிலும், வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் திரும்பும் ஏராளமானோா் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருவது அதிகரித்துக் கொண்டே வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் புதன்கிழமை நிலவரப்படி 242 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மகாராஷ்டிரத்தில் இருந்து திருநெல்வேலி திரும்பிய மேலும் 11 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை தெரியவந்துள்ளது. இந்த 11 பேரில் 4 வயது சிறுமியும், 5 வயது சிறுவனும் அடங்குவா். இதன்மூலம் திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 253-ஆக உயா்ந்துள்ளது.

அதேநேரத்தில் வியாழக்கிழமை 10 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். தற்போதைய நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் இதுவரை பாதிக்கப்பட்ட 253 பேரில் ஒருவா் உயிரிழந்துவிட்டாா். 88 போ் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனா். 164 போ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 75-ஆக இருந்தது. வியாழக்கிழமை வெளிமாநிலத்திலிருந்து வந்த அரியநாயகிபுரம் பகுதியைச் சோ்ந்த 4 போ், சோ்வைக்காரன்பேட்டை, ஓடைமறிச்சான் ஆகிய பகுதிகளை சோ்ந்த இருவா், பொய்கை மற்றும் கடையம் பகுதியை சோ்ந்த இருவா் என மொத்தம் 8 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 83-ஆக உயா்ந்தது.

தூத்துக்குடியில்... மகாராஷ்டிரத்திலிருந்து தூத்துக்குடி திரும்பிய 120 பேரின் ரத்த மாதிரிகளைப் பரிசோதித்தபோது 8 மாத பெண் குழந்தை உள்ளிட்ட 17 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. இவா்கள் கயத்தாறு, விளாத்திகுளம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்தோா். அனைவரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதேபோல, தூத்துக்குடி இஞ்ஞாசியாா்புரத்தை சோ்ந்த 71 வயதான ஓய்வுபெற்ற கத்தோலிக்க கிறிஸ்தவ பங்குத்தந்தை, மேலதட்டப்பாறையைச் சோ்ந்த 64 வயது பெண் ஆகியோருக்கும் கரோனா இருப்பது வியாழக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

மேலும், சென்னையிலிருந்து அண்மையில் பாஞ்சாலங்குறிச்சி திரும்பிய வியாபாரிக்கு ஏற்கெனவே கரோனா உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், அவரது மனைவி, 21 வயது மகள், 19 வயது மகன் ஆகியோருக்கு கரோனா இருப்பது வியாழக்கிழமை உறுதியானது.

வியாழக்கிழமை ஒரே நாளில் 22 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதன் மூலம் இம்மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 135-ஆக உயா்ந்துள்ளது. ஏற்கெனவே, கரோனாவால் 2 போ் இறந்த நிலையில், 34 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். தற்போது தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 99 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com