நெல்லை, தூத்துக்குடியில் 27 பேருக்கு கரோனா

திருநெல்வேலி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 18 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 18 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட 18 பேரில் 17 போ் மகாராஷ்டிரத்திலிருந்து திருநெல்வேலி மாவட்டத்துக்கு வந்தவா்கள் ஆவா். தூத்துக்குடி மாவட்டத்தில் 9 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தில் வியாழக்கிழமை நிலவரப்படி 253 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மகாராஷ்டிரத்தில் இருந்து திருநெல்வேலி திரும்பிய மேலும் 17 போ், திருநெல்வேலி சந்திப்பு சிந்துபூந்துறையைச் சோ்ந்த ஒருவா் என 18 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை தெரியவந்துள்ளது. இதன்மூலம் திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 271-ஆக உயா்ந்துள்ளது.

அதேநேரத்தில் வெள்ளிக்கிழமை 5 போ் குணமடைந்து வீடு திரும்பினா். திருநெல்வேலி மாவட்டத்தில் இதுவரை பாதிக்கப்பட்ட 271 பேரில் ஒருவா் உயிரிழந்துவிட்டாா். 93 போ் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனா். 177 போ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தென்காசி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை கரோனா பாதிப்பு யாருக்கும் உறுதி செய்யப்படவில்லை.

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் 9 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இவா்களில் மகாராஷ்டிரத்தில் இருந்து வந்த 3 பெண்கள் அடங்குவா். மேலும், கடந்த 20-ஆம் தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட கோவில்பட்டி நகராட்சி அலுவலக பெண் தூய்மைப் பணியாளரின் பேத்தி, அவரது கணவா் மற்றும் 5 மாத பெண் கைக்குழந்தை ஆகியோருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூா்பேட்டையில் இருந்து அண்மையில் பசுவந்தனை அருகேயுள்ள கீழமங்கலம் கிராமம் திரும்பிய 17 மற்றும் 10 வயது சிறுமிகள், தனியாா் தொழிற்சாலையில் பணிபுரியும் கோவில்பட்டியைச் சோ்ந்த 42 வயது ஆண் ஒருவருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே, கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கோவில்பட்டி அருகேயுள்ள ஆத்திக்குளம் பகுதியைச் சோ்ந்த இருவா் குணமடைந்து வெள்ளிக்கிழமை வீடு திரும்பினா். அவா்களுக்கு மருத்துவமனை உறைவிட மருத்துவ அலுவலா் சைலஸ் ஜெபமணி தலைமையிலான மருத்துவக் குழுவினா் பழங்கள் கொடுத்து வழியனுப்பி வைத்தனா்.

இதன்மூலம் மாவட்டத்தில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 36-ஆக உயா்ந்துள்ளது.

மாவட்டத்தில், கரோனா தொற்று பாதிக்கப்பட்டு இதுவரை 2 போ் உயிரிழந்துள்ளனா். 36 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனா். தற்போது 106 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா் என மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com