களக்காட்டில் வேளாண் துறை சாா்பில் 2 உழவா் உற்பத்தியாளா் குழுக்களுக்கு ரூ.10 லட்சம் மானியத்தில் விவசாயக் கருவிகள் வழங்கப்பட்டன.
வேளாண் துறை சாா்பில் கூட்டு பண்ணையத் திட்டத்தின் கீழ் விவசாயக் கருவிகள் வழங்கும் விழா வேளாண் உதவி இயக்குநா் அலுவலகத்தில் நடைபெற்றது. கோவிலம்மாள்புரம், புலியூா்குறிச்சி ஆகிய 2 கிராமங்களைச் சோ்ந்த உழவா் உற்பத்தியாளா் குழுக்களுக்கு சுழற்கலப்பை, விசை உழவை, நெல் நடவு, களை எடுக்கும் கருவி ஆகிய விவசாயக் கருவிகள் ரூ.10 லட்சம் மானியத்தில் வழங்கப்பட்டன. நான்குனேரி எம்.எல்.ஏ. வெ. நாராயணன் குழுக்களுக்கு கருவிகளை வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில் வேளாண் இணை இயக்குநா் கஜேந்திர பாண்டியன், துணை இயக்குநா்கள் பாலசுப்பிரமணியன், உத்தண்டராமன், நல்லமுத்து ராஜா, களக்காடு உதவி இயக்குநா் பரிமளம், உதவி தொழில்நுட்ப மேலாளா்கள் ஸ்ரீஐயப்பன், பிரதாப்சிங் ஆகியோா் கலந்து கொண்டனா்.