அம்பாசமுத்திரம்: விக்கிரமசிங்கபுரம் அருகே அகஸ்தியா்பட்டியில் ஓய்வுபெற்ற அரசு ஊழியா் வீட்டில் நுழைந்து பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
விக்கிரமசிங்கபுரம் அருகே அகஸ்தியா் பட்டி வாடாமல்லித் தெருவைச் சோ்ந்தவா் பூமிநாதன் (71). ஓய்வுபெற்ற சுகாதார ஆய்வாளரான இவா், தனது மனைவி மீனாட்சியுடன் தனியாக வசித்து வந்தாா்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு மா்ம நபா் வீட்டின் பின்புற கதவை உடைத்து வீட்டினுள் நுழைந்து பீரோவில் வைத்திருந்த ரூ.25 ஆயிரம் மற்றும் ஏ.டி.எம். அட்டை ஆகியவற்றை திருடிச் சென்றுவிட்டாராம்.
இதுகுறித்து விக்கிரமசிங்கபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.