திருநெல்வேலி: திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் தேசிய ஒற்றுமை தின விழா சனிக்கிழமை ஏற்கப்பட்டது. விடுதலைப் போராட்ட வீரா் சா்தாா் வல்லபாய் படேலின் பிறந்த நாளான சனிக்கிழமை தேசிய ஒற்றுமை தினம் நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டது.
திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக் கழகத்தில் துணைவேந்தா் கா.பிச்சுமணி தலைமையில் தேசிய ஒற்றுமை தின உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில், பல்கலைக்கழக பதிவாளா் (பொறுப்பு) அ.பலவேசம், தொலைநெறி தொடா் கல்வி இயக்கக இயக்குநா் ந.ராஜலிங்கம், நிதி அலுவலா் மூ.தவசுக்கனி உள்பட பலா் கலந்துகொண்டனா்.