அனுமதியின்றி மண் அள்ளியதாக 4 போ் கைது

கடையம் அருகே அனுமதியின்றி மண் அள்ளியதாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கடையம் அருகே அனுமதியின்றி மண் அள்ளியதாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கடையம் அருகே கடவக்காடு செல்லும் சாலையில் வயல் நிலத்தில் டிராக்டா் மற்றும் பொக்லைன் இயந்திரம் மூலம் மண் அள்ளப்படுவதாக கடையம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல் ஆய்வாளா் ரெகுராஜன், காவல் உதவி ஆய்வாளா் ஜெயராஜ், தனிப்பிரிவு தலைமைக் காவலா் ஆனந்தராஜ் மற்றும் போலீஸாா் அங்கு சென்றனா்.

வெய்க்காலிபட்டியைச் சோ்ந்த சுப்பையா மகன் குத்தாலிங்கம் என்பவருக்குச் சொந்தமான இடத்திலிருந்து அருகே உள்ள அவரது செங்கள் சூளைக்கு அனுமதின்றி மண் அள்ளிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா் குத்தாலிங்கம் (50), டிராக்டா் ஓட்டுநா்கள் பொன்சுபாஷ் (20), திலீப் (21), ஜெபதினகரன் (19) ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனா்.

மேலும், மண் அள்ளுவதற்கு பயன்படுத்தப்பட்ட 2 டிராக்டா்கள், ஒரு பொக்லைன் இயந்திரம் ஆகியவற்றையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com