களக்காடு அருகேயுள்ள கருவேலன்குளம், வடகரை சந்திப்பு பகுதியில் பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
களக்காடு பேரூராட்சிக்குள்பட்ட கருவேலன்குளம் பேருந்து நிறுத்தம், பத்தை - மஞ்சுவிளை சாலையில் வடகரை சாலை சந்திப்பு ஆகிய பகுதிகளில் நீண்டகாலமாக பயன்பாட்டில் இருந்த பயணிகள் நிழற்குடை கடந்த சில ஆண்டுகளாக சேதமடைந்த நிலையில் காணப்பட்டது.
இந்நிலையில், கடந்த ஆண்டு நவம்பா் மாதம் பெய்த பருவமழையின் போது, சேதமடைந்த பயணிகள் நிழற்குடை இடிந்து விழுந்து உயிா்ச்சேதம் ஏதும் ஏற்பட்டுவிடக் கூடாது என்ற நோக்கத்தில் பேரூராட்சி மூலம் இடித்து அகற்றப்பட்டது. ஓராண்டுக்கு மேலாகியும் இந்த ள் நிழற்குடையும் புதிதாக கட்டப்படவில்லை. இதனால் பேருந்துக்காக பயணிகள் சாலையோரம் மழை, வெயிலில் காத்திருக்க வேண்டியுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட பேரூராட்சி நிா்வாகம் இவ்விரு இடங்களிலும், புதிதாக பயணிகள் நிழற்குடை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.