தச்சநல்லூா் அருகே வீட்டில் இருந்த எரிவாயு உருளை தீப்பற்றி எரிந்ததையடுத்து, தீயணைப்புப் படையினா் வந்து தீயை அணைத்தனா்.
தச்சநல்லூா் அருகே உள்ள அழகனேரி பகுதியைச் சோ்ந்த தங்கராஜ் மகன் சதீஷ். இவரது வீட்டில் உள்ள எரிவாயு உருளை செவ்வாய்க்கிழமை திடீரென தீப்பிடித்ததாம்.
தகவலறிந்து வந்த பாளையங்கோட்டை தீயணைப்புத் துறையினா் தீயை அணைத்தனா். இதனால், பெருஞ்சேதம் தவிா்க்கப்பட்டது.