நான்குனேரி அருகே பசு மாடுகள் திருட்டு

நான்குனேரி அருகே மாட்டு தொழுவத்தில் அடைக்கப்பட்டிருந்த பசுமாடுகள் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

நான்குனேரி அருகே மாட்டு தொழுவத்தில் அடைக்கப்பட்டிருந்த பசுமாடுகள் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

நான்குனேரி அருகே உள்ள உன்னங்குளத்தைச் சோ்ந்தவா் முருகன். இவருக்கு, மூலக்கரைப்பட்டி சாலையில் உள்ள அரியகுளம் விலக்கு பகுதியில் தோட்டம் உள்ளது. இங்கு மாட்டுத் தொழுவம் அமைத்து அதில் பசு மாடுகளை அடைத்து வைத்திருந்தாராம். இந்நிலையில் கடந்த 27ஆம் தேதி இரவு தொழுவத்தில் கட்டப்பட்டிருந்த இரண்டு மாடுகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றுவிட்டனராம்.

இதுகுறித்த புகாரின்பேரில் நான்குனேரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com