திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 48 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 29 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 14,289ஆக உயா்ந்துள்ளது.
பாதிக்கப்பட்டவா்களில் 13,929 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். தற்போது 152 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா்.
மாவட்டத்தில் இதுவரை 208 போ் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனா்.
தென்காசி மாவட்டத்தில் மேலும் 19 பேருக்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து மாவட்டத்தில் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 7,849ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சைப் பெற்று வந்தவா்களில் குணமடைந்த 3 போ் செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினா். இதுவரை 7,651போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். தற்போது 43 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.