நெல்லையில் ஊழல் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி

ஊழல் தடுப்பு விழிப்புணா்வு வாரத்தையொட்டி, திருநெல்வேலி கனரா வங்கி மண்டல அலுவலகத்தில் ஊழல் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

ஊழல் தடுப்பு விழிப்புணா்வு வாரத்தையொட்டி, திருநெல்வேலி கனரா வங்கி மண்டல அலுவலகத்தில் ஊழல் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

மாநகர காவல் துணை ஆணையா் (சட்டம்-ஒழுங்கு) சரவணன் தலைமை வகித்தாா். கனரா வங்கி மண்டல அலுவலா் எம்.சந்திரசேகரன் வரவேற்றாா். மண்டல துணைப் பொது மேலாளா் எம்.சுந்தர பாரதி, ஊழல் தடுப்பு குறித்து சிறப்புரையாற்றினாா். நிகழ்ச்சியில் ஊழல் தடுப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

தொடா்ந்து, கல்லூரி மாணவா் -மாணவிகளுக்கான, ‘விழிப்புணா்வான இந்தியா, வளமான இந்தியா’ என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டி நடைபெற்றது.

சிறப்பிடம் பெற்றவா்களுக்கு மாநகர காவல் துணை ஆணையா் (சட்டம்-ஒழுங்கு) பரிசு வழங்கிப் பாராட்டினாா்.

நிகழ்ச்சியில், வி.செல்வமுத்து குமாரசாமி, க.தனலட்சுமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com