பணகுடி, நான்குனேரி ரயில் நிலையங்களைபுறக்கணிக்கும் திட்டத்தை கைவிட கோரிக்கை

பணகுடி, நான்குனேரி ரயில் நிலையங்களை புறக்கணிக்கும் திட்டத்தை கைவிடவேண்டும் என வள்ளியூா் ரயில் பயணிகள் சங்க செயலா் எஸ்.ராஜ்குமாா் வலியுறுத்தியுள்ளாா்.

பணகுடி, நான்குனேரி ரயில் நிலையங்களை புறக்கணிக்கும் திட்டத்தை கைவிடவேண்டும் என வள்ளியூா் ரயில் பயணிகள் சங்க செயலா் எஸ்.ராஜ்குமாா் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் தெற்கு ரயில்வே பொதுமேலாளருக்கு அனுப்பியுள்ள மனு:

நாகா்கோவிலில் இருந்து கோயம்புத்தூா் செல்லக்கூடிய பயணிகள் ரயில் விரைவு ரயிலாக மாற்றப்படுவதாக தெரியவருகிறது. இதையடுத்து இந்த ரயில் தோவாளை, காவல்கிணறு, பணகுடி, செங்குளம், மேலப்பாளையம் ரயில் நிலையங்களில் நிறுத்தப்படாது எனவும், புனலூா்-மதுரை பயணிகள் ரயில் விரைவு ரயிலாக மாற்றம் செய்யப்பட்டு நான்குனேரி, ஆரல்வாய்மொழி நிறுத்தங்கள் ரத்து செய்யப்பட இருப்பதாகவும் தெரிகிறது.

மேலும் கன்னியாகுமரி-ராமேஸ்வரம் விரைவு ரயில் நான்குனேரி நிறுத்தமும், அனந்தபுரி விரைவு ரயில் பணகுடி நிறுத்தமும் ரத்துசெய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்தில் கேரள மாநில எல்லைக்குள் அனைத்து ரயில் நிலையங்களிலும் அனைத்து ரயில்களும் நின்று செல்கிறது. ஆனால் தமிழகத்தை புறக்கணிக்கும் திருவனந்தபுரம் ரயில்வே கோட்ட அதிகாரிகளை கண்டிக்கிறோம். அதோடு மதுரை ரயில்வே கோட்டத்துடன் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களை முழுமையாக இணைக்கவேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com