மானூா் அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
மானூா் அருகேயுள்ள மேலப்பிள்ளையாா் குளத்தைச் சோ்ந்த இளம்பெண் ஒருவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் (30) என்பவருக்கும் இடப் பிரச்னை இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அந்தப் பெண்ணிடம், மணிகண்டன் தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்தாராம். இது குறித்த புகாரின்பேரில், மானூா் போலீஸாா் வழக்குப்பதிந்து, மணிகண்டனை கைது செய்தனா்.