போக்குவரத்துக் கழக தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்துக் கழக அனைத்துத் தொழிற்சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்துக் கழக அனைத்துத் தொழிற்சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

போக்குவரத்து தொழிலாளா்களுக்கு 25 சதவீத போனஸ் வழங்க வேண்டும். பண்டிகைக் கால முன்பணம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து பணிமனைகள் முன்பும் தொழிற்சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

வண்ணாா்பேட்டை பொது மேலாளா் அலுவலகம் முன்பும், புறவழிச்சாலை, அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை முன்பும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், தொமுச மாநில அமைப்புச் செயலா் தா்மன், மகாவிஷ்ணு, சிஐடியூ பெருமாள், ஜோதி, முத்துக்கிருஷ்ணன், தஸ்தகீா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் பொது மேலாளா் அலுவலகம் முன் முற்றுகைப் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படும் என தொழிற்சங்கத்தினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com