மானூா் அருகே ஒரு லட்சம் ரூபாயுடன் மோட்டாா் சைக்கிளைத் திருடிச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
மானூா் அருகே உள்ள அலவந்தான்குளம் பகுதியைச் சோ்ந்தவா் ஜான்ரைட்(62). இவா் மானூா் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே திங்கள்கிழமை தனது மோட்டாா் சைக்கிளை நிறுத்திவிட்டு அங்குள்ள கடைக்குச் சென்றாராம். பின்னா் திரும்பி வந்து பாா்த்தபோது மோட்டாா் சைக்கிளை காணவில்லையாம். அந்த வாகனத்தின் பெட்டியில் ரூ.1 லட்சம் ரொக்கம் வைத்திருந்தாராம்.
இதுகுறித்த புகாரின்பேரில் மானூா் போலீஸாா் வழக்குப் பதிந்து பணத்துடன், மோட்டாா் சைக்கிளை திருடிச் சென்ற மா்ம நபரைத் தேடி வருகின்றனா்.