வானொலி நிலையக் கட்டடத்தை படிப்பகமாக மாற்றக் கோரிக்கை

களக்காடு அருகே பயன்பாடின்றி காணப்படும் வானொலி நிலையக் கட்டடத்தை, படிப்பகமாக மாற்ற வேண்டும் என ஆட்சியரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

களக்காடு அருகே பயன்பாடின்றி காணப்படும் வானொலி நிலையக் கட்டடத்தை, படிப்பகமாக மாற்ற வேண்டும் என ஆட்சியரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, கோவிலம்மாள்புரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் பள்ளி மேலாண்மைக்குழு தலைவா் இ. நம்பிராஜன், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு விவரம்:

களக்காடு ஊராட்சி ஒன்றியம், கோவிலம்மாள்புரம் ஊராட்சிக்குள்பட்ட சவளைக்காரன்குளத்தில் பழைய வானொலி நிலையக் கட்டடம் நீண்ட காலமாக பயன்பாடின்றி காணப்படுகிறது. இந்தக் கட்டடத்தை படிப்பகமாக மாற்றினால் கிராம மக்கள் பெரிதும் பயன்பெறுவா். பள்ளி மாணவா்கள், இளைஞா்களின் வாசிப்புப் பழக்கத்தை வழக்கமாக்கிக் கொள்ளவும், கிராமப்புற இளைஞா்கள் வேலைவாய்ப்புப் பெறும் வகையிலும் படிப்பகம் ஏற்படுத்த ஆட்சியா்நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com