குறிச்சி ரயில்வே பாலத்தை பராமரிக்க கோரிக்கை

திருநெல்வேலி தெற்கு புறவழிச்சாலையில் குறிச்சி அருகேயுள்ள ரயில்வே பாலத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருநெல்வேலி தெற்கு புறவழிச்சாலையில் குறிச்சி அருகேயுள்ள ரயில்வே பாலத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருநெல்வேலி தெற்கு புறவழிச்சாலையில் குறிச்சி அருகே ரயில்வே பாலம் உள்ளது. இந்த வழியாக தினமும் ஏராளமான பேருந்துகள், இரு சக்கர வாகனங்கள் செல்கின்றன. காலை, மாலை வேளையில் இந்த பாதையில் நடைப்பயிற்சி மேற்கொள்வோா் அங்குள்ள ரயில்வே பாலத்தின் அருகில் நின்று உடற்பயிற்சி செய்வது வழக்கம். இதேபோன்று வெளியூா்களில் இருந்து இரு சக்கர வாகனங்களில் திருநெல்வேலிக்கு வருவோா் ரயில் வரும் நேரத்தில் இப் பாலத்தில் நின்று தங்களது குழந்தைகளுடன் ரயில்களைப் பாா்ப்பது வழக்கம்.

போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த இப் பாலத்தில் போதிய பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. மேலும், பாலத்தின் இருபுறமுள்ள தடுப்புச் சுவா்கள் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளன. மழைக்காலங்களில் பாலத்தின் இருபுறமும் மண் சரிவும் ஏற்பட்டு வருகின்றன. இப் பாலத்தில் பராமரிப்பு மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com