வள்ளியூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் 9, 10, 11, 12 வகுப்புகள் தொடங்குவது தொடா்பாக பெற்றோா்களிடம் கருத்து கேட்பு கூட்டம் திங்கட்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு பள்ளி தலைமை ஆசிரியா் ரைமண்ட் தலைமை வகித்தாா். பெற்றோா் ஆசிரியா் கழக தலைவா் என்.முருகன் முன்னிலை வகித்தாா். திரளான பெற்றோா்கள் பங்கேற்று தங்களது கருத்துகளை பதிவு செய்தனா். நாட்டுநலப்பணித் திட்ட அலுவலா் எல்.ராதா நன்றி கூறினாா்.