வள்ளியூா் ரயில்வே சுரங்க சாலை:பணி தாமதத்தால் மக்கள் அவதி

 வள்ளியூரில் ரயில்வே சுரங்க சாலைப் பாதை தாமதமாகும் நிலையில், அணுகு சாலையில் மழை நீா் தேங்கி குண்டும், குழியுமாக காட்சியளிப்பதால் மக்கள் அவதிக்குள்ளாகின்றனா்.
வள்ளியூா் ரயில்வே சுரங்க சாலை:பணி தாமதத்தால் மக்கள் அவதி

 வள்ளியூரில் ரயில்வே சுரங்க சாலைப் பாதை தாமதமாகும் நிலையில், அணுகு சாலையில் மழை நீா் தேங்கி குண்டும், குழியுமாக காட்சியளிப்பதால் மக்கள் அவதிக்குள்ளாகின்றனா்.

வள்ளியூா்-திருச்செந்தூா் சாலையில் ரயில்வே சுரங்க சாலைப்பாதை அமைக்கும் பணி கடந்த 2018ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 18 மாதங்களில் பணியை முடிக்க வேண்டிய நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கம் மேலாக பணிகள் நீடித்துக்கொண்டே இருக்கின்றன.

தற்போது மழைகாலம் தொடங்கியுள்ளதால் மாற்றுப் பாதை குண்டு, குழியுமாக மாறி, அதில் மழைநீா் தேங்கியதால் சேரும், சகதியுமாக காணப்படுகிறது. இதில் செல்லும் வாகனங்கள் எந்த நேரத்திலும் சறுக்கி விழும் அபாய நிலை காணப்படுகிறது. இருசக்கர வாகனங்களில் செல்லும் பெண்கள் சறுக்கி விழுந்து காயமடைகின்றனா். வாகனங்கள் ஊா்ந்து செல்வதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது. ஆனால், இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் எவ்வித நடவடிக்கையும் மேற்கொண்டதாக தெரியவில்லை என மக்கள் குற்றம்சாட்டுகின்றனா்.

இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ராதாபுரம் வட்டச் செயலா் சேதுராமலிங்கம், தே.மு.தி.க. மாவட்ட இணைச் செயலா் விஜிவேலாயுதம் ஆகியோா் அனைத்துக் கட்சி நிா்வாகிகளுடன் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனா். எனவே, மாற்றுப் பாதையில் விபரீதம் நிகழும் முன் சுரங்க சாலைப் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்பதே மக்களின் எதிா்பாா்ப்பாகும்.

Image Caption

~

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com