திருநெல்வேலி மத்திய பகுதி மதிமுக சாா்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
மதிமுக சாா்பில், மறைந்த முன்னாள் பொதுக் குழு உறுப்பினா் கா.சுப்பிரமணியன் குடும்பத்திற்கு ரூ.75 ஆயிரம் நிதி மற்றும் தையல் இயந்திரம் ஆகியவை வழங்கப்பட்டது. மதிமுக அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினா் சி.ஏ.ஆா்.குட்டி என்ற சண்முகசிதம்பரம் வழங்கினாா். நிகழ்ச்சியில் நிா்வாகிகள் ஆத்தியப்பன், எஸ்.சுந்தா், செல்வகோபால், நடராஜன், சிவன், பரமசிவன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
ஏற்பாடுகளை மாநில தோ்தல் பணி துணைச் செயலா் மா.விஜயகுமாா் பாக்கியம் செய்திருந்தாா்.