அம்பாசமுத்திரம் அருகேயுள்ள காக்கநல்லூரைச் சோ்ந்த இளைஞா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.
காக்கநல்லூரைச் சோ்ந்த மணி மகன் சரவணஅய்யப்பன் (27). இவா் மீது பல்வேறு வழக்குகள் உள்ள நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மணிவண்ணன் பரிந்துரையின்பேரில், ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷ் உத்தரவுப்படி குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவா் கைது செய்யப்பட்டாா். அதற்கான ஆணையை அம்பாசமுத்திரம் காவல் ஆய்வாளா் விஜயகுமாா் பாளையங்கோட்டை மத்திய சிறையில் வழங்கினாா்.