பெருமாள்புரம், வேய்ந்தான்குளம் பகுதிகளில் சாலையோர ஆக்கிரமிப்புகள் செவ்வாய்க்கிழமை அகற்றப்பட்டன.
திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம், தற்காலிக பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளிலும், திருநெல்வேலி-திருவனந்தபுரம் சாலையிலும் உள்ள ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்து வந்தனா்.
இந்நிலையில் நெடுஞ்சாலைத்துறை உதவிப் பொறியாளா் கிருஷ்ணசாமி தலைமையில் நெடுஞ்சாலைத்துறைப் பணியாளா்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றினா். சுமாா் 50-க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இதையொட்டி பெருமாள்புரம் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.