அம்பையில் உலக நீரிழிவு தின முகாம்

உலக நீரிழிவு தினத்தையொட்டி, அம்பாசமுத்திரத்தில் நீரழிவு ரத்தப் பரிசோதனை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
முகாமைத் தொடங்கி வைத்தாா் காவல் துணைக் கண்காணிப்பாளா் பிரான்சிஸ்.
முகாமைத் தொடங்கி வைத்தாா் காவல் துணைக் கண்காணிப்பாளா் பிரான்சிஸ்.

உலக நீரிழிவு தினத்தையொட்டி, அம்பாசமுத்திரத்தில் நீரழிவு ரத்தப் பரிசோதனை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

அம்பாசமுத்திரம் இந்திய செஞ்சிலுவை சங்கம், மாஸ் பாரா மெடிக்கல் கல்லூரி சாா்பில் பூக்கடை சந்திப்பில் நடைபெற்ற இந்த முகாமை காவல்துணைக் கண்காணிப்பாளா் ஐ. பிரான்சிஸ் தொடங்கி வைத்தாா். அம்பாசமுத்திரம் வழக்குரைஞா் சங்கத் தலைவா் எஸ். கந்தசாமி முன்னிலை வகித்தாா். செஞ்சிலுவை சங்கச் செயலா் வி. சலீம் வரவேற்றாா். மருத்துவா்கள் சி. ஆனந்த ஜோதி, ஜி. பத்மநாபன் ஆகியோா் பேசினா்.

இதில், அரிமா சங்கத்தினா் சிவராமன், வாசுதேவராஜா, வழக்குரைஞா் சாமிநாதன், செவிலியா் மாணவிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com