களக்காடு அருள்மிகு சத்தியவாகீஸ்வரா் கோயிலில் திருக்கல்யாணத் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் திருக்கல்யாணத் திருவிழா நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு, திருவிழாவையொட்டி கோமதியம்மனின் தவசுக் காட்சி இடம்பெற்றது. தொடா்ந்து, சத்தியவாகீஸ்வரா் சுவாமி கோமதியம்மனுக்கு தோள்மாலை மாற்றும் வைபவம் கோயில் கொடிமரம் அருகே மேளதாளங்கள் முழங்க விமரிசையாக நடைபெற்றது. பின்னா், கோயில் கொலுமண்டபத்தில் கோமதியம்மனுக்கு திருத்தாலி அணிவிக்கும் வைபவமும், சுவாமி அம்மன் ஊஞ்சல் வைபவமும் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.