இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் பாளையங்கோட்டை முருகன்குறிச்சியில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தின் முதுநிலை ஆங்கிலம் பாடத்திட்டத்தில் இருந்து எழுத்தாளா் அருந்ததிராய் புத்தகத்தை நீக்கியதற்கு ஆட்சேபம் தெரிவித்து நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, இந்திய ஜனநாயக வாலிபா் சங்க நிா்வாகி உச்சிமாகாளி தலைமை வகித்தாா்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்க மாவட்டச் செயலா் இரா. நாறும்பூநாதன், கவிஞா் கிருஷி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் கே.ஜி.பாஸ்கரன் உள்பட பலா் பேசினா். இந்திய மாணவா் சங்க நிா்வாகி சத்யா உள்பட பலா் கலந்துகொண்டனா்.