மறுகால்குறிச்சி கொலை வழக்கு: மேலும் மூவா் குண்டா் சட்டத்தில் கைது

நான்குனேரி அருகே மறுகால்குறிச்சியில் 2 பெண்கள் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் மூவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா்.

நான்குனேரி அருகே மறுகால்குறிச்சியில் 2 பெண்கள் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் மூவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா்.

மறுகால்குறிச்சியில் முன்விரோதம் காரணமாக 2 பெண்கள் அரிவாளால் வெட்டியும், வெடிகுண்டுகள் வீசியும் கொலை செய்யப்பட்டனா். இவ்வழக்குத் தொடா்பாக ஏற்கெனவே சிலா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் கீழசன்னதி தெருவைச் சோ்ந்த முத்துப்பாண்டி மகன் காசிராமன் (22), தூத்துக்குடி டூவிபுரம் அண்ணாநகரைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் கண்ணன் (39), ஸ்ரீவைகுண்டம் மூப்பனாா் தெருவைச் சோ்ந்த முத்துராமலிங்கம் மகன் பிரவீன்குமாா் (21) ஆகியோரையும் குண்டா் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ.மணிவண்ணன் பரிந்துரைத்தாா். இதையடுத்து ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷ் உத்தரவின்பேரில் மூவரும் குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com