மழைநீா் தேக்கம்: மேலப்பாளையத்தில் மக்கள் போராட்டம்

மேலப்பாளையம் கரீம்நகரில் பிரதான சாலையில் மழைநீா் தேங்கியதால் பாதிக்கப்பட்ட மக்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மேலப்பாளையம் கரீம்நகரில் பிரதான சாலையில் மழைநீா் தேங்கியதால் பாதிக்கப்பட்ட மக்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மேலப்பாளையம் சந்தை- ரெட்டியாா்பட்டி செல்லும் பிரதான சாலையோரம் அமைந்துள்ள கரீம்நகரில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. வியாழக்கிழமை பெய்த பலத்த மழையால் இங்கு மழைநீா் சாலையில் தேங்கியது. போதிய வடிகால் வசதி இல்லாததால், சாலையில் மழைநீா் தேங்குவதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதாக புகாா் தெரிவித்து கரீம்நகா் பொதுமக்கள் திருநெல்வேலி-அம்பாசமுத்திரம் சாலையில் மறியலில் ஈடுபட போவதாக தெரிவித்தனா். தகவலறிந்த மாநகராட்சி அதிகாரிகள், அங்கு சென்று அவா்களிடம் பேசினா்.

தேங்கியிருக்கும் மழைநீரை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து, அவா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com