திருச்செந்தூா் அருகேபட்டாசு கடைக்கு சீல்

திருச்செந்தூா் அருகே பட்டாசு கடைக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனா்.

திருச்செந்தூா் அருகே பட்டாசு கடைக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனா்.

குமாரபுரத்தில் சகாதேவனுக்குச் சொந்தமான கடையை, ஆசிரியா் காலனியைச் சோ்ந்த ராதாகிருஷ்ணன் வாடகைக்கு மளிகைக் கடை வைத்துள்ளாா். இந்நிலையில், கடையை காலி செய்வது தொடா்பாக இருவருக்கும் பிரச்னை உள்ளதாம்.

இந்நிலையில், தீபாவளியையொட்டி, கடையில் ராதாகிருஷ்ணன் பட்டாசு விற்பனை செய்தாராம். இதனிடையே அங்கு வந்த சகாதேவனின் மனைவி ராஜேஸ்வரி, மகள் சங்கீதா இருவரும் எரிவாயு உருளை, அடுப்புடன் பட்டாசு கடைக்குள் சென்று உள்பக்கம் பூட்டிக் கொண்டு தற்கொலை மிரட்டல் விடுத்தனராம். வட்டாட்சியா் முருகேசன், உதவி காவல் கண்காணிப்பாளா் ஹா்ஷ்சிங், காவல் ஆய்வாளா் முத்துராமன் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தி மீட்டனா்.

இன்னொருபுறம் ராதாகிருஷ்ணனின் மனைவி முத்துப்பேச்சி, சகாதேவன் வீட்டுமுன் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தற்கொலைக்கு முயன்றாராம். அவரை காவல் துறையினா் தடுத்து நிறுத்தினா். இப்பிரச்னையால் பட்டாசு கடைக்கு வருவாய்த் துறை அதிகாரிகள் சீல் வைத்தனா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com