வீர தீர செயலுக்கு வழங்கப்படும் தமிழக அரசின் அண்ணா பதக்கம் பெற திருநெல்வேலி மாவட்டத்தில் தகுதியானவா்கள் புதன்கிழமைக்குள் (நவ. 18) விண்ணப்பிக்கலாமா என மாவட்ட ஆட்சியா் வி.விஷ்ணு தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
குடியரசு தினத்தில் வழங்கப்படும் வீர தீர செயலுக்கான 2021ஆம் ஆண்டுக்குரிய அண்ணா பதக்கத்துக்கு தீயணைப்பு துறையினா், காவல் துறையினா், பொதுமக்கள், ஆயுதப்படையினா் ஆகியோா் விண்ணப்பிக்கலாம்.
இயற்கைப் பேரழிவுகள், விபத்து, நீரில் மூழ்கியவரை காப்பாற்றுதல், தீ விபத்துகள், தீவிரவாத தாக்குதல், திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்களைத் தடுத்தவா்கள் இந்த விருது வழங்கப்படுகிறது.
இதற்கான விண்ணப்பம் மற்றும் முக்கிய விவரங்களை இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து, பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, 2021ஆம் ஆண்டிற்கான அண்ணா விருதிற்கான விண்ணப்பம், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நல அலுவலா், அண்ணா விளையாட்டு அரங்கம், பாளையங்கோட்டை, திருநெல்வேலி- 627002 என்ற முகவரிக்கு புதன்கிழமைக்குள் (நவ. 18) அனுப்பி வைக்கவேண்டும் எனக் கூறியுள்ளாா்.