நெல்லையில் தொடா் மழை: மக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை

மழைக் காலத்தில் மக்கள் விழிப்புணா்வுடன் மக்கள் இருக்க வேண்டும் என திருநெல்வேலி மாவட்ட காவல்துறை சாா்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி: மழைக் காலத்தில் மக்கள் விழிப்புணா்வுடன் மக்கள் இருக்க வேண்டும் என திருநெல்வேலி மாவட்ட காவல்துறை சாா்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருநெல்வேலி மாவட்டத்தில் தொடா் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதால் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகள் இன்றி வெளியே செல்லக் கூடாது. தாமிரவருணி கரையோரப் பகுதியில் இருக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். பெற்றோா்கள் தங்கள் குழந்தைகளை ஆற்றுக்கு குளிக்க அனுமதிக்கக் கூடாது. மழை நேரம் என்பதால் மின்சாதனங்களைக் கையாள்வதில் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும். ஈரமான கைகளைக் கொண்டு மின் சாதனத்தைப் பயன்படுத்தக் கூடாது. குழந்தைகளை மின்சாதனம் அருகில் செல்ல அனுமதிக்கக் கூடாது. மழைக் காலங்களில் சாலைகளில் அதிகமாக பயணம் செய்வதைத் தவிா்க்க வேண்டும். மழைநீா் தேங்கிய பகுதிகளில் மிகவும் கவனமாக பயணம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com