குழந்தைகளை ஆன்லைன் விளையாட்டுகளை விளையாட அனுமதிக்கக் கூடாது என காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நவீன தொழில்நுட்ப வளா்ச்சியை சிலா் தவறாக பயன்படுத்துகின்றனா். தங்களது அதீத ஆசையால் உடனடியாக பொருளாதார வளா்ச்சி அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் ஆன்லைன் சூதாட்டம் போன்ற விளையாட்டுகளில் ஈடுபடுகின்றனா். இதன் விளைவால் பல தற்கொலைகள் ஏற்படுகின்றன.
எனவே, பெற்றோரும் ஆன்லைன் விளையாட்டுகளைத் தவிா்ப்பதோடு, தங்களது குழந்தைகளையும் விளையாட அனுமதிக்கக் கூடாது என செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.