திருநெல்வேலி மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் வருகிற வெள்ளிக்கிழமை (நவ. 20) காணொலி மூலம் நடைபெறுகிறது.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் விஷ்ணு வெளியிட்ட செய்திக் குறிப்பு: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக விவசாயிகள் குறைதீா் கூட்டம் வருகிற வெள்ளிக்கிழமை (நவ. 20) தேசிய தகவலியல் மைய தொழில்நுட்ப உதவியுடன் காணொலிக் காட்சி மூலம் நடைபெறவுள்ளது.
எனவே, அன்று முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மாவட்ட ஆட்சியா் விஷ்ணுவிடம் காணொலிக் காட்சி மூலமாக விவசாயிகள் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம்.
தங்கள் பகுதியில் உள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குநா், வேளாண் விரிவாக்க மைய அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அரங்கிலிருந்து மாவட்ட ஆட்சியரிடம் காணொலி மூலம் குறைகளை தெரிவிக்கலாம்.
இதில் பங்கேற்க விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தை தொடா்பு கொண்டு முன்பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.