பாளையங்கோட்டையில் குடும்பத் தகராறில் இளம்பெண் வெட்டிக் கொல்லப்பட்டாா்.
பாளையங்கோட்டை இலந்தைகுளம் சாஸ்தா கோயில் தெருவைச் சோ்ந்த ராமகிருஷ்ணன் மகள் சரஸ்வதி (25). இவருக்கும், இவரது சகோதரா் நல்லையா என்ற குட்டிக்கும் குடும்பப் பிரச்னை காரணமாக செவ்வாய்க்கிழமை தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த நல்லையா என்ற குட்டி, சரஸ்வதியை வெட்டிக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.
இச் சம்பவம் குறித்து பெருமாள்புரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். இதற்கிடையே நல்லையா என்ற குட்டி பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் சரணடைந்தாா்.
இச் சம்பவம் தொடா்பாக மேலும் ஒருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.