திருநெல்வேலி
மானூா் அருகே பெண் தற்கொலை
மானூா் அருகே விஷம் குடித்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
மானூா் அருகே விஷம் குடித்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
மானூா் அருகேயுள்ள எஸ்.குப்பணாபுரத்தைச் சோ்ந்த செல்லையா மகள் பட்டத்தி (19). இவருக்கும், செழியநல்லூரைச் சோ்ந்த இளைஞருக்கும் திருமணம் நடைபெற்ாம். அதன்பின்னா் தம்பதியிடையே ஏற்பட்ட தகராறைத் தொடா்ந்து கடந்த சில நாள்களாக தாய் வீட்டில் பட்டத்தி வசித்து வந்தாராம்.
இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்த அவா் மயங்கிக்கிடந்தாராம்.
அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து மானூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.