மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு சங்கம் சாா்பில் திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித் தொகையை ரூ.3 ஆயிரமாக உயா்த்த வேண்டும்; தனியாா் துறை வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத சிறப்பு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் செல்வசுந்தரி தலைமை வகித்தாா். பொருளாளா் நம்பிராஜன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.