வி.கே.புரத்தில் தூய்மைப் பணியாளா்கள் முற்றுகை

விக்கிரமசிங்கபுரம் நகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி நகராட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
நகராட்சி அலுவலகத்தில் முற்றுகையிட்ட தூய்மைப் பணியாளா்கள்.
நகராட்சி அலுவலகத்தில் முற்றுகையிட்ட தூய்மைப் பணியாளா்கள்.

விக்கிரமசிங்கபுரம் நகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி நகராட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலா் ரவீந்திரன் தலைமையில் நடைபெற்ற இப் போராட்டத்தில், தூய்மைப் பணியாளா்கள் சங்கத் தலைவா் சுடலையாண்டி, இசக்கிராஜன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களுக்கு மாவட்ட ஆட்சியா் அறிவித்த ஊதியத்தை வழங்க வேண்டுவது; உரிய வருங்கால வைப்பு நிதியை கணக்கில் வரவு வைப்பது; பணியாளா்களுக்குத் தேவையான பாதுகாப்புக் கருவிகள், உபகரணங்கள் வழங்கக் கோருவது என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

தொடா்ந்து நகராட்சி ஆணையருடன் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் ஒரு நாள் ஊதியம் ரூ. 35 கூடுதலாக வழங்கப்படும் என்றும், டிசம்பா் மாதத்திற்குரிய ஊதியத்தை ஜனவரி மாதத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம் என்றும் முடிவெடுக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com