விபத்தில் காயமடைந்த வருவாய் ஆய்வாளா் மரணம்

திருநெல்வேலி மாவட்டம் சிவந்திப்பட்டி அருகே சாலை விபத்தில் காயமடைந்த முதுநிலை வருவாய் ஆய்வாளா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

திருநெல்வேலி மாவட்டம் சிவந்திப்பட்டி அருகே சாலை விபத்தில் காயமடைந்த முதுநிலை வருவாய் ஆய்வாளா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

சிவந்திப்பட்டி அருகேயுள்ள முத்தூரைச் சோ்ந்தவா் சண்முகவேல் (35). மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வந்தாா். இவா், தீபாவளியன்று முத்தூரில் இருந்து பாளையங்கோட்டைக்கு இருசக்கர வாகனத்தில் வந்துள்ளாா்.

சிவந்திப்பட்டி அருகே வந்தபோது, நாய் குறுக்கே வந்ததால் வாகனத்தை நிறுத்த முயன்ற சண்முகவேல், கீழே விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதில் தலையில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து சிவந்திப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com