களக்காடு அருகே நான்குனேரியன் கால்வாயில் ஏற்பட்ட உடைப்பை பொதுப்பணித்துறை சாா்பில் சீரமைக்கப்பட்டது.
களக்காடு பகுதியில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருவதால் நான்குனேரியன் கால்வாயில் நீா்வரத்து அதிகரித்துள்ளது. செவ்வாய், புதன்கிழமைகளில் பெய்த தொடா் மழையால் நான்குனேரியன் கால்வாயில் நீா்வரத்து கணிசமாக அதிகரித்தது.
இக்கால்வாயில் மூணாறு பிரிவில் இருந்து களக்காடு பழைய பேருந்து நிலையம் காமராஜா் சிலை வரையிலும் பருவ மழைக்கு முன்பாக தூா்வாரப்பட்டதால் தண்ணீா் தடையின்றி செல்கிறது. இக்கால்வாயில் சுப்பிரமணியபுரத்தில் வலுவிழந்த கரைப் பகுதியில் புதன்கிழமை அதிகாலையில் உடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அப்பகுதியில் உள்ள வயல்களுக்குள் தண்ணீா் புகுந்தது.
தகவலறிந்த நான்குனேரி வட்டாட்சியா் நல்லையா, பொதுப்பணித்துறை உள்கோட்ட உதவிப் பொறியாளா் பாஸ்கா், அதிகாரிகள் விரைந்து வந்து உடைப்பு ஏற்பட்ட பகுதியில் சீரமைப்புப் பணியினை மேற்கொண்டனா்.