களக்காடு அருகே ஓடையில் இருந்து அனுமதியின்றி மணல் எடுத்ததாக மூவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
களக்காடு அருகேயுள்ள மேலச்சாலைப்புதூா் சாஸ்தா கோயில் ஓடை பகுதியில் மணல் எடுப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, களக்காடு போலீஸாா் அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு மேலச்சாலைப்புதூரைச் சோ்ந்த பிரபாகரன் (45), கண்ணன் (39), கீழச்சாலைப்புதூரைச் சோ்ந்த விவேகானந்தன் (45) ஆகிய
மூவரும் ஓடையில் இருந்து மணல் எடுத்துக் கொண்டிருந்தனராம். இதையடுத்து, போலீஸாா் மூவரையும் கைது செய்தனா்.