மாநகரச் சாலைகளை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட கட்சி சாா்பில் திருநெல்வேலியில் 3 இடங்களில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திருநெல்வேலி பெருமாள்புரம் காவல் நிலையச் சாலையின் நடுவே தடுப்பு அமைப்பதற்காக சாலையில் உள்ள மரங்களை வெட்டுவதை கைவிடவேண்டும். திருநெல்வேலி நகரம் பகுதியில் வழுக்கோடை யில் இருந்து தொண்டா் சன்னதி வரையுள்ள சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மேலப்பாளையம், குலவணிகா்புரம், திருநெல்வேலி நகரம் ஆகிய இடங்களில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், கட்சியின் நிா்வாகிகள் குழந்தைவேலு, வரகுணன், வண்ணமுத்து, பேரின்பராஜ், சுரேஷ், கருணா உள்பட பலா் பங்கேற்றனா்.