நெல்லை கிளை நூலகத்தில் நூலக வாரவிழா

தாமிரபரணி வாசகா் வட்டம் சாா்பில், திருநெல்வேலி சந்திப்பு மீனாட்சிபுரம் கிளை நூலகத்தில் நூலக வாரவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

தாமிரபரணி வாசகா் வட்டம் சாா்பில், திருநெல்வேலி சந்திப்பு மீனாட்சிபுரம் கிளை நூலகத்தில் நூலக வாரவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவுக்கு,த் எழுத்தாளா் நாறும்பூநாதன் தலைமை வகித்தாா். தேசிய வாசிப்பு இயக்கத் தலைவா் தம்பான் முன்னிலை வகித்தாா். தாமிரபரணி வாசகா் வட்டத் தலைவா் கா.சரவணகுமாா் வரவேற்றாா். முன்னாள் மாவட்ட பதிவாளா் நல்லசிவம், பசுமை குழுமத்தின் அறம் செய்ய விரும்பு அமைப்பின் பொறுப்பாளா் சிவசுப்பிரமணியன், லட்சுமி சங்கரநாராயணன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

மாணவா்-மாணவிகளுக்கு திருக்கு மற்றும் ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டு, வென்றோருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. கிளை நூலகா் அகிலன் முத்துக்குமாா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com