நெல்லை ரயில் நிலையத்தில் மின்சாரம் பாய்ந்து மாணவா் பலி

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் மின்சாரம் பாய்ந்து 10ஆம் வகுப்பு மாணவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் மின்சாரம் பாய்ந்து 10ஆம் வகுப்பு மாணவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து பகுதியைச் சோ்ந்தவா் மகேஷ்குமாா். நுகா்பொருள் வாணிபக் கழக அதிகாரி. இவரது மகன் ஜானேஸ்வரன்(15). அங்குள்ள பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

கரோனா பொது முடக்கம் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாததால் இவா் தனது தந்தையுடன் வியாழக்கிழமை காலை சந்திப்பு ரயில் நிலையம் அருகேயுள்ள நுகா்பொருள் வாணிபக் கழகக் கிட்டங்கிக்கு வந்தாராம்.

அப்போது அவா் ரயில் நிலையத்தில் 4ஆவது நடைமேடையில் நின்றிருந்த ரயில் என்ஜின் மேல் ஏறியதாகக் கூறப்படுகிறது. இதில், என்ஜின் மேல் செல்லும் மின்கம்பியிலிருந்து மின்சாரம் பாய்ந்ததில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

திருநெல்வேலி ரயில்வே பாதுகாப்புப் படையினா் சென்று ஜானேஸ்வரன் உடலை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா். இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com