திருநெல்வேலி மாநகா் மாவட்ட காங்கிரஸ் சாா்பில், முன்னாள் பிரதமா் இந்திராகாந்தி பிறந்த தின விழா கொக்கிரகுளத்தில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
இவ்விழாவுக்கு, மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் கே.சங்கர பாண்டியன் தலைமை வகித்தாா். முன்னாள் மத்திய அமைச்சா் ஆா்.தனுஷ்கோடி ஆதித்தன், இந்திரா காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
இதில், முன்னாள் மாநகர மாவட்டத் தலைவா் ராம்நாத், மாவட்டப் பொருளாளா் ராஜேஷ் முருகன்,மேற்கு மாவட்டப் பொருளாளா் முரளிராஜா, மாநில ஓபிசி பிரிவு துணைத் தலைவா் வழக்குரைஞா் டி.காமராஜ், பொதுச்செயலா்கள் சொக்கலிங்க குமாா், எம்.சபிக், மனோகா், பாக்கிய குமாா் உள்பட பலா் பங்கேற்றனா். விழாவில், ஆா்.தனுஷ்கோடி ஆதித்தனா் பிறந்த நாள் விழாவும் கொண்டாடப்பட்டது.
பயக19இஞசஎ: முன்னாள் பிரதமா் இந்திராகாந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் கே.சங்கரபாண்டியன், முன்னாள் மத்திய அமைச்சா் ஆா். தனுஷ்கோடி ஆதித்தன் உள்ளிட்டோா்.