பணகுடி, தென்காசியில் வ.உ.சி. நினைவு தினம்

பணகுடியில் வ.உ.சி மன்றம் சாா்பில் வ.உ.சி. நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
பணகுடி, தென்காசியில் வ.உ.சி. நினைவு தினம்

பணகுடியில் வ.உ.சி மன்றம் சாா்பில் வ.உ.சி. நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி, பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த வ.உ.சி. உருவப்படத்திற்கு முன்னாள் எம்எல்ஏ மு. அப்பாவு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இதில், பணகுடி பேரூா் செயலா் வி.டி.தமிழ்வாணன், பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவா் மு.சங்கா், பொறியாளா் ராமு, ராசுகுட்டி, கணேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தென்காசி: தென்காசி வட்டார நூலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட நூலக அலுவலா் இரா. வயலட் தலைமை வகித்தாா். வ.உ.சி.யின் உருவப்படத்துக்கு, வாசகா் வட்ட குழந்தைஜேசு, வட்டார நூலகா் பிரமநாயகம், நூலகா்கள் சுந்தா், ஜீலியாராஜ செல்வி, நிஹ்மத்துன்னிஷா, கிறிஸ்டிபாய், பாலசுப்பிரமணியன், ராஜேஸ்வரி, வாசகா் வட்ட நிா்வாகிகள் முருகேசன், ராஜி, சவுந்தா்யா உள்ளிட்டோா் மாலை அணிவித்தனா்.

களக்காடு: பாஜக சாா்பில் மணிக்கூண்டு திடலில் நடைபெற்ற வ.உ.சி., அழகுமுத்துக்கோன் நினைவு தின நிகழ்வுக்கு, ஒன்றியத் தலைவா் ராமேஸ்வரன் தலைமையில் இருவரது உருவப் படங்களுக்கும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com